Friday, August 19, 2022

கவிஞரும் பாடலாசிரியருமான யுகபாரதி.....

 

ஊற்றங்கரையில் ஆகஸ்ட் 21 அன்று நடைபெறும் *முத்தமிழ் இலக்கியப் பேரவையின் கவியரங்கில் கவிஞர்* *அறிவுமதி தலைமையில் “தெளித்தலும் தெளித்தல் நிமித்தமும்” என்னும் பொது தலைப்பின் கீழ் பனித்துளி , மைத்துளி , கண்ணீர் துளி என மூன்று தனிச் சுற்றுக்களில் கவிதை பாட வருகிறார் பல்லாங்குழியில் வட்டம் பார்த்த கவிஞரும் பாடலாசிரியருமான  யுகபாரதி* !

*
கணையாழி, படித்துறை ஆகிய இதழ்களின் ஆசிரியக் குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இலக்கியப் பங்களிப்புச் செய்தவர், மரபு மற்றும் புதுக்கவிதைகளில் தேர்ந்தவர் கவிஞர் யுகபாரதி .இது வரை ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட  திரைப்பாடல்களை எழுதியுள்ளார்*

*
ஜெய் பீம்* படத்தில் *மண்ணிலே ஈரமுண்டு*...
*
ரன்* படத்தில் ‘’ *காதல் பிசாசே காதல் பிசாசே* ‘’
*
திருடா திருடி* படத்தில் *மன்மத ராசா மன்மத ராசா*  ‘’
*
கில்லி* படத்தில் *கொக்கர* *கொக்கரக்கோ*’’
*
சந்திரமுகி* படத்தில் ‘’ *கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்*   ‘’
*
சண்டகோழி* படத்தில் ‘’ *தாவணி போட்ட* ‘’
*
வருத்தப்படாத வாலிபர் சங்கம்* படத்தில் *ஊதா கலர் ரிப்பன்* ‘’
*
ரம்மி* படத்தில் *கூட மேல கூட வச்சு*

*
போன்ற மக்களின் மனம் கவர்ந்த பாடல்களை எழுதியுள்ளவர் தான் கவிஞர் யுகபாரதி*

*
சிறந்த பாடலாசிரியாருக்கான தமிழக அரசின் விருதை பெற்ற பெருமைக்குரியவர்*

*
கவிஞர் எழுத்தாளர் பதிப்பாளர் கட்டுரையாளர் என பன்முகங்கள் கொண்ட ஆளுமை அவர்* .

*
மனப்பத்தாயம், பஞ்சாரம்  தெப்பக்கட்டை* *நொண்டிக்காவடி* *தெருவாசகம்* *அந்நியர்கள் உள்ளே வரலாம்* *போன்ற கவிதை தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்*
*
கண்ணாடி முன்*, *நேற்றைய காற்று*, *ஒன்று* ,*நடுக்கடல்* *தனிக்கப்பல்  வீட்டுக்கு* *வெளியே வெவ்வேறு சுவர்கள் அதாவது* *நானொருவன் மட்டிலும் போன்ற கட்டுரை* *தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்*


*
இளைஞர்களின் நாடித்துடிப்பு அறிந்து துள்ளல் இசையில் தரமான* *தமிழ்ப்பாடல்களை அள்ளித்தரும் ஆற்றல்மிகு இளைஞன் நல்ல கலைஞன் கவிஞர் யுகபாரதி ஊற்றங்கரைக்கு கவிதை பாட வருகிறார்*

*
இந்த மண்ணின் கவிஞனை வரவேற்போம் வாருங்கள் ! வாருங்கள் !!* 

No comments:

Post a Comment